இளம்பெண்ணுக்கு 4 வருடங்களாக பாலியல் தொல்லை... காங்கிரஸ் எம்.பி., கைது!

 
ராகேஷ் ரத்தோர் காங்கிரஸ் எம்.பி.,

சமீப காலங்களாக நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக தமிழகம்  உட்பட பல  மாநிலங்களிலும் அரசியல் கட்சி பிரமுகர்கள் பெண்களுக்கு பாலியல் தொல்லைத் தரும் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி., ஒருவர் பாலியல் புகாரில் சிக்கி கைது செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் சீதாபூரில் தனது வீட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துக் கொண்டிருந்த காங்கிரஸ் எம்.பி., ராகேஷ் ரத்தோரைப் போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

தற்கொலை இளம்பெண் தீ விபத்து கற்பழிப்பு பாலியல் கொலை க்ரைம்

திருமணம் செய்து கொள்வதாக கூறி இளம்பெண் ஒருவரைக் கடந்த 4 வருடங்களாக பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்ததாக எம்.பி., ரத்தோர் மீது குற்றம் சாட்டப்பட்டது. 

இது குறித்து கடந்த ஜனவரி 17ம் தேதியன்று, அந்தப் பெண் புகார் அளித்த நிலையில், உத்தரப் பிரதேச காவல்துறை ரத்தோர் மீது வழக்குப் பதிவு செய்தது. மூன்று நாட்களுக்குப் பிறகு, காங்கிரஸ் எம்.பி.,யின் வழக்கறிஞர்களான அரவிந்த் மஸ்தலன் மற்றும் தினேஷ் திரிபாதி ஆகியோர் சீதாப்பூரில் முன்ஜாமின் கோரி மனு தாக்கல் செய்தனர்.

சிறுமி பாலியல் வன்கொடுமை!! 15 வயது சிறுவன் பகீர் வாக்குமூலம்!!

ஜனவரி 23ம் தேதியன்று சீதாப்பூரில் உள்ள எம்.பி.-எம்.எல்.ஏ நீதிமன்றம் ரத்தோரின் முன்ஜாமின் மனுவை நிராகரித்தது. அலகாபாத் உயர்நீதிமன்றம் லக்னோ பெஞ்ச் இந்த வழக்கில் தனது முன்ஜாமின் மனுவை நிராகரித்த ஒரு நாளுக்குப் பிறகு ரத்தோர் கைது செய்யப்பட்டார்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web