தை அமாவாசை... எகிறியது பூக்களின் விலை... மல்லி கிலோ ரூ.3,000க்கு விற்பனை!

 
மல்லிக்கைப்பூ மல்லி மலர் சந்தை

இன்று தை அமாவாசை தினத்தை முன்னிட்டும், அடுத்தடுத்து வளர்பிறை சுப முகூர்த்த தினங்கள் என்பதாலும் தமிழகத்தின் பல பகுதிகளிலும் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. மதுரையில் இன்று காலை மல்லிகைப்பூ கிலோ ரூ.3,000க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பொதுவாக பண்டிகைக் காலங்களில் பூக்களின் விலை உயர்வது வழக்கமான ஒன்றாக மாறியிருக்கிறது. பொங்கல் பண்டிகை காலங்களில் கிலோ மல்லிகைப்பூ ரூ.3,000 வரை விற்பனையான நிலையில், இன்று இந்த மாதத்தில் இரண்டாவது முறையாக அமாவாசையை முன்னிட்டு மல்லிகைப்பூ விலை மீண்டும் ரூ.3,000யைத் தொட்டுள்ளது.

மல்லிகை மல்லிப்பூ பூ சந்தை

இன்றைய காலை நேர விலை நிலவரப்படி மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் மல்லிகைப்பூ ஒரு கிலோ 3,000 ரூபாய்க்கும், பிச்சிப்பூ மற்றும் முல்லை ஆகிய பூக்கள் கிலோ ரூ.2,000, மெட்ராஸ் மல்லி - 1ஆயிரம், சம்மங்கி , செவ்வந்தி -350, பட்டன் ரோஸ் - 350க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பூக்கள்

நேற்று மல்லிகைப்பூ கிலோ இரண்டாயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று கிலோ ரூ.3,000 என ஒரே நாளில் விலை உயர்ந்துள்ளது பொதுமக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இதேபோல், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மலர் சந்தையிலும் மல்லிகை ரூ.3,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web