2025 ஐ.சி.சி சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தானில் நடைபெறுகிறது
Nov 17, 2021, 07:29 IST
2024 முதல் 2031 க்கு இடையில் நடைபெறும் ஐசிசி தொடர்கள் மற்றும் அதனை நடத்தும் நாடுகள் உள்ளி விவரத்தை நேற்று ஐசிசி வெளியிடப்பட்டது.
அதன்படி 2025 ஆம் ஆண்டு நடைபெறும் ஐ.சி.சி சாம்பியன்ஸ் டிராபியை பாகிஸ்தானில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் சுமார் 25 ஆண்டுகளுக்கு பின் ஐசிசி தொடர் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இது குறித்து முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் கேப்டனும் மற்றும் கிரிக்கெட் வர்ணனையாளர்கள் ஒருவருமான ரமீஸ் ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் “2025 ஐ.சி.சி சாம்பியன்ஸ் டிராபியை பாகிஸ்தான் நடத்துவது மிகவும் பெருமையும் மகிழ்ச்சியும் அளிக்கிறது. இந்தச் செய்தி மில்லியன் கணக்கான பாகிஸ்தான் ரசிகர்கள், வெளிநாட்டவர்கள் மற்றும் உலக ரசிகர்களை நிச்சயம் உற்சாகப்படுத்தும்.” என்று தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.
From around the
web