போரில் கை, கால் இழந்து தவித்த சிறுவன்.. ஓடி வந்து உதவி செய்த துபாய் இளவரசர்!
இஸ்ரேலின் ஆக்கிரமிப்பிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி பாலஸ்தீனத்தில் ஆபரேஷன் அல் அக்ஸா என்ற திடீர் தாக்குதலை ஹமாஸ் நடத்தியது. இதில், 1,200 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். 100 பேர் வரை பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், கடந்த 13 மாதங்களில் காசா உள்ளிட்ட பாலஸ்தீன நகரங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி 45,227 பேரை கொன்றது. அவர்களில் 107,573 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
Six-year-old #Palestinian child Mohammed Saeed has become a triple amputee as a result of Israel’s attacks.
— Gulf Times (@GulfTimes_QATAR) December 16, 2024
A man walking through the displacement camp was shocked to come across the child, who had lost both legs and an arm, and was using a roller skate to help aid his… pic.twitter.com/wr4AJVcJAb
இறந்தவர்களில் 70 சதவீதம் பேர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று ஐ.நா தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல்களில் கைகால்களை இழந்த ஆயிரக்கணக்கான குழந்தைகளில் முகமது சயீத் ஷபானும் ஒருவர். வடக்கு காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஏழு வயது சயீத் தனது இரண்டு கால்களையும் வலது கையையும் இழந்தார். சயீத்தின் கதை சமூக வலைதளங்களில் வைரலானது. பாலஸ்தீன முகாமில் ரோலர் ஸ்கேட்களை பயன்படுத்தி அவர் சுற்றித்திரியும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.
.@HamdanMohammed undertakes to provide prosthetic limbs for the Palestinian child, Mohammad Saeed Shaaban, who lost his legs and right hand in an Israeli airstrike on northern Gaza. pic.twitter.com/31XpG91cMB
— Dubai Media Office (@DXBMediaOffice) December 21, 2024
இது துபாய் பட்டத்து இளவரசரும், துணைப் பிரதமரும், பாதுகாப்பு அமைச்சருமான ஷேக் ஹம்தான் பின் முகமதுவின் கவனத்திற்கு வந்துள்ளது, அவர் இப்போது பாலஸ்தீனிய சிறுவன் முகமது சயீத் ஷபானுக்கு செயற்கை உறுப்புகளை வழங்க உறுதியளித்துள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!