வெடித்த சர்ச்சை... பூணூலை கழற்றுங்க.... தேர்வு எழுத சென்ற மாணவர்களிடம் கறார் காட்டிய அதிகாரிகள்!

 
வெடித்த சர்ச்சை... பூணூலை கழற்றுங்க.... தேர்வு எழுத சென்ற மாணவர்களிடம் கறார் காட்டிய அதிகாரிகள்!

 

கர்நாடக மாநிலம் சிவமோகா மாவட்டத்தில் கர்நாடகா பொது நுழைவு தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வில் கலந்து கொண்ட மாணவர்கள் அணிந்திருந்த பூணூலை அகற்ற வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. 

இதன் காரணமாக தேர்வு நடத்தும் அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.இது குறித்து உயர் கல்வி அமைச்சர் சுதாகர் ”அதிகாரிகளில் இச்செயல் மிகவும் துரதிஷ்டவசமானது. இரண்டு தேர்வு மையத்திலும் இது போன்ற புகார்கள் வந்துள்ளன. 

இருப்பினும் மாநிலம் முழுவதும் உள்ள பெரும்பாலான மையங்களில் தேர்வு சமூகமாக நடைபெற்றதாக தகவல்கள் கூறப்படுகின்றன. அனைத்து மதங்களையும் அவர்களின் நம்பிக்கையையும் மதிக்கிறோம். நாங்கள் இந்த செயல்களை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. இதற்கு தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web