குக்கர் வெடித்து இளம்பெண்பலி... பெரும் சோகம்!
தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வ.உ.சி. நகரில் வசித்து வருபவர் குருசாமி . இவருடைய மனைவி 45 வயது சாந்தி. இவர் வழக்கம் போல் குக்கரில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென குக்கர் திடீரென வெடித்து சிதறியது.
திடீரென ஏற்பட்ட இந்த விபத்தில், சாந்தி தூக்கி வீசப்பட்டார். உடனடியாக அவரது கணவர், சாந்தியை மீட்டு சிகிச்சைக்காக உடனடியாக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தனர்.
மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சாந்தி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து கோவில்பட்டி மேற்கு காவல் துறையில் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவில்பட்டியில் குக்கர் வெடித்து பெண் பலியான சம்பவம் மாநிலம்முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!