நண்பனை கொலை செய்து ஆற்றில் வீசிய கொடூரம்!!

 
நண்பனை கொலை செய்து ஆற்றில் வீசிய கொடூரம்!!

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் வசித்து வருபவர் தினேஷ்வரன். இவர் திருப்பூர் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். வார விடுமுறைகளில் மட்டுமே சொந்த ஊருக்கு செல்வதை வழக்கமாக வைத்திருந்தார்.

அதே போல் விடுமுறை நாளில் திருப்பூரில் இருந்து குமாரபாளையம் வந்திருந்தார். அன்று நடக்க இருந்த திருமணத்துக்கு புறப்பட்டுச் சென்றார். ஆனால் அவர், வீடு திரும்பவில்லை.இது குறித்து அவருடைய குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர்.

நண்பனை கொலை செய்து ஆற்றில் வீசிய கொடூரம்!!

அவருடைய உறவினர்கள், நண்பர்களிடத்தில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில் வெங்கடேஷ் என்கிற நண்பர் மட்டும் முன்னுக்குபின் முரணாக பதிலளித்தார். இந்த பதில் காவலர்களுக்கு பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியது.

மீண்டும் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட கிடுக்குப்பிடி விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தன. அதில் தினேஷ் வார இறுதிகளில் சொந்த ஊருக்கு வரும் போது வெங்கடேஷின் மனைவிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். அதனால் அவரை வீட்டுக்கு வரவழைத்து தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

நண்பனை கொலை செய்து ஆற்றில் வீசிய கொடூரம்!!
ஆவர்

அவருடைய சகோதரர் கிருஷ்ணராஜ் உதவியுடன் தினேஷ்ராஜின் உடலை காவிரியாற்றில் வீசிவிட்டதாக காவல்துறையிடம் தெரிவித்தார். வெங்கடேஷ் மற்றும் குற்றத்துக்கு உடந்தையாக இருந்த அவருடைய சகோதரர் கிருஷ்ணராஜ் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

இருவரிடம் இருந்து பெற்ற வாக்குமூலத்தின் அடிப்படையில் இவர்களை குமாரபாளையம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

From around the web