ஜெயலலிதா நிறுத்தி வைத்த திட்டத்தை திமுக அரசு செயல்படுத்துகிறது... முன்னாள் அமைச்சர்கள் பேச்சு!

 
அதிமுக

ஜெயலலிதா நிறுத்தி வைத்த திட்டத்தை திமுக அரசு செயல்படுத்துகிறது என்று அதிமுக முன்னாள் அமைச்சர்கள் குற்றம்சாட்டினர். 

தூத்துக்குடியில் உப்பள தொழிலை அழித்து கப்பல் கட்டும் விரிவாக்க தளம் அமைக்கப்பட கூடாது என்று வலியுறுத்தி உப்பள தொழிலாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் இணைந்து முத்தையாபுரம் பஜாரில் இரண்டாவது முறையாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். போராட்டத்திற்கு உப்பு உற்பத்தியாளர் சங்க செயலாளர் சேகர் தலைமை வகித்தார். மதசார்பற்ற ஜனதாதள கட்சி மாநில துணைத்தலைவர் வக்கீல் சொக்கலிங்கம் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். 

ஜெயலலிதா மரணம் குறித்த சர்ச்சை! 6 வாரத்தில் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர், அதிமுக தெற்கு மாவட்ட செயலாளர் சண்முகநாதன் பேசும்போது "பல தலைமுறைகளாக இந்த உற்பத்தி தொழிலில் ஈடுபட்டு வரும் மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்காமல் பாதுகாக்க வேண்டும், துறைமுகத்திடம் 12 ஆயிரம் ஏக்கர் நிலம் உள்ளது அதனைப் பயன்படுத்த வேண்டும், திமுக அரசு நினைத்தால், கனிமொழி எம்பி நினைத்தால் உடனடியாக இந்த திட்டத்தை நிறுத்த முடியும், தொடர்ந்து இதே நிலை நீடித்தால் உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு அதிமுக துணை நிற்கும் இவர்கள் அனைவரையும் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து பேச நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார், 

முன்னாள் அமைச்சர் செல்லபாண்டியன் பேசும்போது, "அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது 2013ம் ஆண்டு இந்த திட்டத்தை அவர் நிறுத்தி வைத்து, தூத்துக்குடி மாவட்டத்தில் வேறு இடத்திற்கு மாற்றி நடவடிக்கை எடுத்தார், ஆனால் தற்போது திமுக அரசு சிலரது சுயலாபத்திற்காக இந்த இடத்தில் திட்டத்தை  செயல்படுத்தி வருகிறது இதனை அதிமுக கண்டிக்கிறது. இதற்கு எதிராக தொழிலாளர்கள் உற்பத்தியாளர்களை ஒன்று திரட்டி அதிமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று கூறினார். 

கருணாநிதி கலைஞர் ஜெயலலிதா

இதேபோல்  ஐ.என்.டி.யு.சி. தொழிற்சங்க தேசிய செயலாளர் கதிர்வேல், தமிழக வெற்றி கழகம் ஜே.கே.ஆர். முருகன், நாம் தமிழர் கட்சி ஜேக்கப் தேவதாஸ் அபிஷேக், அன்னலட்சுமி, உழவர் உழைப்பாளர் கட்சி ராஜேஷ், மீனவர் சங்கம் முனியசாமி உட்பட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு உப்பளங்களை பாதுகாக்க வலியுறுத்தி பேசினர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?