“நாடக கம்பெனி போலத் தான் திமுக ஆட்சி நடக்கிறது... மீண்டும் ஆட்சிக்கு வராது” - அண்ணாமலை!

நாடக கம்பெனி போல தான் திமுக ஆட்சி நடக்கிறது. அதனால் திமுக மீண்டும் ஆட்சிக்கு வராது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், “சென்னை ஈசிஆர் சாலையில் திமுக கொடி பொருத்திய காரில் இளைஞர்கள், இளம்பெண்களை விரட்டும் வீடியோ காட்சி நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது. தமிழகத்தில் எந்தளவு சட்டம்-ஒழுங்கு சீரழிந்துள்ளது என்பதற்கு இது எடுத்துக்காட்டு.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், விசாரணை என்ற பெயரில் பத்திரிகையாளர்களின் செல்போன்களை பறிமுதல் செய்யும் காவல்துறை சிறப்பு புலனாய்வுக் குழுவின் நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறேன்.
திமுக 7வது முறையாக மீண்டும் ஆட்சி அமைக்கும் என கூறி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பகல் கனவில் இருக்கிறார். நாடக கம்பெனி போலத் தான் திமுக ஆட்சி நடக்கிறது. எனவே மீண்டும் திமுக ஆட்சிக்கு வரப்போவதில்லை.
பெரம்பூரில் அரசுப்பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். வழக்கை நடத்தக்கூடிய அமைப்பு மிக மோசமாக இருக்கிறது” என்று கூறினார்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!