உறுப்பினர்களை நீக்க பொதுக்குழுவுக்கு அதிகாரம் கிடையாது... - ஓபிஎஸ் பதில்!
அதிமுகவின் இரட்டை இலை சின்னம் குறித்து தேர்தல் ஆணையம் முடிவெடுப்பதற்கான காலக்கெடுவை நீட்டிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
அதிமுக உட்கட்சி பூசல் காரணமாக பல்வேறு அணிகளாக பிளவுபட்டுள்ள நிலையில், அதன் பிறகு சந்தித்த அத்தனைத் தேர்தல்களிலுமே தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகிறது. அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி தரப்பு, ஓபிஎஸ் அணி, சசிகலா அணி, டிடிவி தினகரனின் அமமுக என அத்தனை அணிகளைச் சேர்ந்தவர்களுமே தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகின்றனர்.
இதனிடையே அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தைப் பயன்படுத்துவது குறித்தும், கொடி தொடர்பாக பல்வேறு நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், அதில் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு சாதகமாகவே தீர்ப்பு வந்தது. இருப்பினும் அதிமுக உட்கட்சி தொடர்பாக பல வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில், இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் பதில் அளித்துள்ளார். அதில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக தான் தேர்ந்தெடுக்கப்பட்டது சட்டப்படி செல்லும் என்றும், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக தனது பதவிக்காலம் டிசம்பர் 2026 வரை உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் அடிப்படை விதிகளுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி செயல்படுகிறார் என்றும், கட்சியின் கொள்கைகளை வகுக்கவே பொதுக்குழுவுக்கு அதிகாரம் - உறுப்பினர்களை நீக்க அதிகாரம் இல்லை” என்றும் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரகாரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!