தமிழகம் முதலிடம் என்பதே இலக்கு! ஸ்டாலின் சூளுரை…!

 
தமிழகம் முதலிடம் என்பதே இலக்கு! ஸ்டாலின் சூளுரை…!


தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் ஆகஸ்ட் 13 ல் தொடங்கப்பட்டு 23 நாட்கள் நடத்தப்பட்டுள்ளது. இந்த கூட்டத் தொடரில் பல்வேறு அறிவிப்புக்கள் வெளியிடப்பட்டன.

தமிழகம் முதலிடம் என்பதே இலக்கு! ஸ்டாலின் சூளுரை…!

குறிப்பாக, காவல்துறையினருக்கான திட்டங்கள்,நீட் தேர்வு விலக்கு மசோதா,கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி ஆகியவை மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளன.
இந்நிலையில்,சட்டத்தின் ஆட்சியில் தமிழ்நாடு முதலிடம் என்பதே நம் இலக்கு என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் “உள்துறை மானியக் கோரிக்கை விவாதங்களின்மீது பதில் உரை நிகழ்த்தி தமிழக மக்களின் அமைதியான வாழ்க்கைக்கு அடித்தளம் அமைத்துத் தரும் பொறுப்பு இருப்பதாக உணர்கிறேன்.

அதன் அடிப்படையிலேயே காவல்துறை ஒளிபெறவும் வழிகாட்டவும் தேவையான பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. சட்டத்தின் ஆட்சியில் தமிழகம் முதலிடம் என்பதே நம் இலக்கு” எனத் தெரிவித்துள்ளார்.

From around the web