கொதிக்கும் தண்ணீரை ஊற்றிய விவகாரம்.. சிகிச்சை பலனின்றி கணவர் உயிரிழப்பு.. மனைவி மீது வழக்குப்பதிவு!

 
சுரேஷ் -அமராவதி

ராணிப்பேட்டை மாவட்டம் லாலாப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். கூலி வேலை செய்யும் இவருக்கு அமராவதி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில், அமராவதிக்கு ஆண் நண்பர்கள் உள்ளனர். இதனால் நண்பர்களுடன் செல்போனில் அடிக்கடி பேசி வருகிறார். ஆனால், மனைவிக்கு வேறு ஆண்களிடம் பேசுவது சுரேஷுக்கு பிடிக்கவில்லை. இதனால் மனைவியை கண்டித்துள்ளார்.

கணவன் மனைவி

ஆனால் அமராவதி அதை கண்டுகொள்ளாமல் மற்ற ஆண்களிடம் தொடர்ந்து பேசி வந்துள்ளார். இதனால் கடந்த சில நாட்களாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று கணவன்-மனைவி இடையே வழக்கம்போல் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கணவர் மீது அமராவதி கடும் கோபத்தில் இருந்தார். இதையடுத்து கணவரை பழிவாங்க திட்டமிட்டார்.

கொலை

அந்த திட்டப்படி, தூங்கிக் கொண்டிருந்த கணவர் சுரேஷ் மீது கொதிக்கும் நீரை ஊற்றினார். இதனால் உடலில் பலத்த காயம் அடைந்த சுரேஷ் கதறி அழுதார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுரேஷுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web