பொதுமக்கள் மகிழ்ச்சி... கடந்த 1 வருடமாக பயமுறுத்தி வந்த சிறுத்தை கூண்டிற்குள் சிக்கியது!

 
சிறுத்தை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக பொது மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை கூண்டில் சிக்கியது.கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வனக்கோட்டத்தில் யானைகள், சிறுத்தை, புலிகள் மற்றும் காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளது. 

இந்நிலையில் கடந்த 12 மாதங்களுக்கு முன்பு தேன்கனிக்கோட்டை வனச்சரகத்துக்கு உட்பட்ட அடவிசாமிபுரம் அடுத்துள்ள சனத்குமார் ஆற்றின் கரையோர பகுதியில் சிறுத்தை ஒன்று பாறை இடுக்குகளில் மறைந்துதிருந்து அப்பகுதியில் ஆடுகள் மற்றும் நாய்களை அடிக்கடி அடித்து இழுத்து சென்றது.

சிறுத்தை

தொடர்ந்து இதே பகுதியில் சிறுத்தை முகாமிட்டிருந்ததால் குட்டிகளுடன் சிறுத்தை இருக்க வாய்ப்புள்ளாக கருதி வனத்துறையினர் அப்பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்தி, சிறுத்தையை பிடிக்க கூண்டு வைத்து கண்காணித்து வந்தனர். ஆனால் சிறுத்தை கூண்டில் சிக்காமல் அங்கிருந்து இடம் பெயர்ந்து, கடந்த சில மாதங்களாக தர்மபுரி மாவட்டம் ந்திராபுரம் பகுதியில் உள்ள கிணற்றில் தவறி விழுந்தது.

அப்போது வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்க முயன்றனர். ஆனால் சிறுத்தை கிணற்றிலிருந்து தப்பித்து வெளியேறி வனப்பகுதிகளுக்குள் சென்றது. பின்னர் அங்கிருந்து செட்டிப்பள்ளி காப்புகாட்டிற்கு இடம்பெயர்ந்த நிலையில் அந்த பகுதிகளில் வனத்துறையினர் மரத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தி கண்காணித்து வந்தனர்.

 சிறுத்தை

கடந்த ஓராண்டாக வனத்துறை வைத்த கூண்டில் சிறுத்தை சிக்காமல் பொதுமக்களை அச்சுறுத்தி வந்ததால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என வனத்துறையின் எச்சரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் கடந்த சில தினங்களாக மீண்டும் அடவிசாமிபுரம் பொன்னாங்கூர் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வனத்துறைக்கு தகவல் வந்ததையடுத்து, வன உயிரின பாதுகாவலர் பகான் ஜெகதீஸ் சுதாகர் உத்தரவின் பேரில் தேன்கனிக்கோட்டை வனச்சரகர் விஜயன் தலைமையில் வனத்துறையினர் ஏற்கெனவே வைத்திருந்த கூண்டில் இறைச்சி வைத்து கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்றிரவு இறைச்சி சாப்பிட கூண்டிற்குள் சிறுத்தை வந்த போது, சுமார் 8 வயதுள்ள சிறுத்தை கூண்டிற்குள் சிக்கியது. இதனை அறிந்த சுற்றி உள்ள கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web