உல்லாசத்தால் விபரீதம்... ஆத்திரத்தில் தாய், மகனை கொடூரமாக கொன்ற இளைஞர்கள்!

 
ஆண் நண்பர்கள்

உல்லாசத்தால் தாய், மகனை இளைஞர்கள் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் வசித்து வருபவர் கீதா பூஷன், (70). இவருக்கு 45 வயதில் ஜிதேந்திரா என்ற மகன் உள்ளார். சில நாட்களுக்கு முன், இவர்களது வீடு நீண்ட நாட்களாக திறக்கப்படவில்லை. சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது, ​​ஜிதேந்திராவும், அவரது தாயார் கீதாவும் கேபிள் வயரால் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் கிடந்தனர். 

கொலை

இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. புத்தாண்டைக் கொண்டாட, ஜிதேந்திரா தனது நண்பர்களான 19 வயது சுபம் நாராயணன் மற்றும் மங்கேஷ் ஆகியோரை தனது வீட்டிற்கு அழைத்தார். ஜிதேந்திராவின் வீட்டில் 3 பேரும் சேர்ந்து மது அருந்தியுள்ளனர்.

கைது

இதையடுத்து ஜிதேந்திரா தனது நண்பர்கள் இருவருடன் உடலுறவு கொள்ள முயன்றார். இதனால் அவரது நண்பர்கள் சுபம் நாராயணன், மங்கேஷ் ஆகியோர் ஆத்திரமடைந்தனர். பின்னர் இருவரும் சேர்ந்து ஜிதேந்திராவை கொல்ல முடிவு செய்தனர். அதன்படி ஜிதேந்திராவை கழுத்தை நெரித்து கொன்றனர். இதை பார்த்த ஜிதேந்திராவின் தாய் அலறி துடித்தார். இதனால், கீதா பூஷனையும் கொன்றுவிட்டு வீட்டில் இருந்த பணம், நகை, செல்போன்களை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றனர். இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web