2 குழந்தைகளை கிணற்றில் வீசி கொலை செய்த கொடூரத் தாய் !

 
2 குழந்தைகளை கிணற்றில் வீசி கொலை செய்த கொடூரத் தாய் !


விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள காரியாபட்டி அருகில் கே.ஆலங்குளத்தில் வசித்து வருபவர் புஷ்பவனம். இவரது மனைவி பிரவீனா . இவருக்கு வயது 35. இந்த தம்பதிகளுக்கு 4 வயதில் ஹர்சிகா என்ற குழந்தையும், பூமிகா என்ற 11 மாத கைக்குழந்தையும் உள்ளனர். கணவன் மனைவிக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு குடும்பத் தகராறு அதிகரித்தது. இதனால் பிரவீனா தனது குழந்தைகளுடன் தாய் வீட்டுக்கு செல்வதாக கூறி குழந்தைகளை கூட்டிக் கொண்டு சென்றார். திம்மாபுரம் கிராமத்துக்கு சென்ற அவர் தனது மனதை கல்லாக்கிக்கொண்டு அங்குள்ள கிணற்றுக்குள் தனது 2 குழந்தைகளையும் தூக்கி போட்டு விட்டு அவரும் உடனடியாக கிணற்றில் குதித்தார்.

2 குழந்தைகளை கிணற்றில் வீசி கொலை செய்த கொடூரத் தாய் !


கிணற்றில் விழுந்த சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் ஓடிச்சென்று கிணற்றை எட்டிப் பார்த்தனர். அப்போது பிரவீனா கிணற்றில் ஒரு சுவரை பிடித்து தத்தளித்து கொண்டு இருந்தார். உள்ளே இறங்கி காப்பாற்ற முயல்வதற்குள் 2 குழந்தைகளும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தன.
இதுகுறித்து காரியாபட்டி தீயணைப்பு துறையினருக்கு கிராம மக்கள் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் உயிருக்கு போராடிய நிலையில் பிரவீனாவை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். குழந்தைகளை உயிரிழந்த நிலையில் தான் மீட்க முடிந்தது.

கிணற்றில் மூழ்கி இறந்த ஹர்சிகா, பூமிகா குழந்தைகளின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சுழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரவீனா 2 குழந்தைகளை கொன்று தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், பரிதாபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அ.முக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

From around the web