மூன்றாவதும் பெண் குழந்தை.. ஆத்திரத்தில் மனைவியை பெட்ரோல் ஊற்றி எரித்த கொடூர கணவன்!
மகாராஷ்டிராவின் பர்பானி மாவட்டத்தில், 32 வயதான குண்ட்லிக் உத்தம் காலே என்ற நபர், தனது மனைவி மைனாவை தீ வைத்து எரித்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக கடந்த 26ம் தேதி இரவு உத்தம் காலேவுக்கும், அவரது மனைவி மைனாவுக்கும் மூன்றாவது பெண் குழந்தை பிறந்தது தொடர்பாக தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அன்றைய தினம் மட்டும் உத்தம் காலேவுக்கும், அவரது மனைவி மைனாவுக்கும் மூன்று பெண் குழந்தைகள் இருப்பது தொடர்பாக அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று ஏற்பட்ட வாக்குவாதத்தில் உத்தவ் காலே தனது மனைவி மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்தார். இது தொடர்பாக மைனாவின் சகோதரி போலீசில் புகார் அளித்துள்ளார்.
உத்தவ் காலே தன் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததை அடுத்து, மைனா பொறுக்க முடியாமல் அலறியடித்துக்கொண்டு வீட்டை சுற்றி ஓடினார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அதற்குள் அவரது உடல் முழுவதும் தீ பரவி பலத்த தீக்காயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை காப்பாற்ற போராடி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால், பாதி வழியிலேயே அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய போலீசார், உத்தம் காலே என்ற குற்றவாளியை கைது செய்துள்ளனர். மூன்று பெண் குழந்தைகள் உள்ளதால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் கணவன் மனைவி தீக்குளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!