சிறுவன் உள்பட 5 பேரை கொலை செய்து தன்னைத் தானே சுட்டுக் கொண்ட விபரீதம்!

 
சிறுவன் உள்பட 5 பேரை கொலை செய்து தன்னைத் தானே சுட்டுக் கொண்ட விபரீதம்!


உலகம் முழுவதும் ஒருபுறம் கொரோனா அச்சுறுத்தலை தடுக்க போராடி வரும் அதே வேளையில் இந்த காலகட்டத்தில் வன்முறை சம்பவங்களும் அதிக அளவில் அரங்கேறி வருகின்றன. அந்த வகையில் இங்கிலாந்தில் சமீபத்தில் தாக்குதல்களும், வன்முறைகளும் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் பிளைமவுத் மாகாணத்தைச் சேர்ந்த கீஹாம் பகுதியில் மாலை 6 மணி அளவில் அடையாளம் தெரியாத நபரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.


சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடந்ததை சிறிதும் எதிர்பார்க்காத பொதுமக்களில் சிலர் பாதுகாப்பான இடத்திற்கு சென்று பதுங்கினர். இருப்பினும் தாக்குதலில் 3 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் என ஐந்து பேர் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பது அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தகவல் அறிந்ததுமே அடுத்த நிமிடமே அங்கு போலீசார் சுற்றிவளைத்தனர். ஆனால் அதிர்ச்சி அளிக்கும் விதமாக கொலையாளியும் தன்னைத் தானே சுட்டு உயிரிழந்தததும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


துப்பாக்கி சூட்டில் 10 வயது சிறுவனும் கொல்லப்பட்டது அப்பகுதியையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அதில் காயமடைந்த சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பல்வேறு நாட்டுதலைவர்கள் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பிளைமவுத் மாகாண அமைச்சர் ஜானி மெர்சர் கூறுகையில், கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் இது தீவிரவாத தாக்குதல் இல்லை என உறுதி அளித்துள்ளார்.

From around the web