நாளை நாடாளுமன்றத்தில் வக்ஃப் வாரிய சட்ட திருத்த மசோதா தாக்கல்!

இந்தியாவில் ஜனவரி 31ம் தேதி குடியரசு தலைவர் உரையுடன் பாராளுமன்ற கூட்டத் தொடர் தொடங்கியது. பிப்ரவரி 1ம் தேதி சனிக்கிழமை மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்நிலையில் நாளை பிப்ரவரி 3ம் தேதி திங்கட்கிழமை வக்ஃப் வாரிய சட்ட (திருத்தம்) மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக் குழு (ஜேபிசி) தலைவர் ஜகதாம்பிகா பால், பாஜக எம்பி சஞ்சய் ஜெய்ஸ்வாலுடன் இணைந்து இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் தாக்கல் செய்கிறார்.
மேலும், குழு முன் அளிக்கப்பட்ட சாட்சியங்களின் பதிவுகளும் சமர்ப்பிக்கப்படும். முன்னதாக, இந்த அறிக்கை ஜனவரி 30 அன்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் ஒப்படைக்கப்பட்டது. எதிர்க்கட்சித் தலைவர்கள் கருத்து வேறுபாடுகளை சமர்ப்பித்த போதிலும், ஜேபிசி வரைவு அறிக்கையை ஏற்று ஜனவரி 29 அன்று சில திருத்தங்களை அங்கீகரித்தது. வக்ஃப் சொத்துக்களை ஒழுங்குபடுத்துவதற்காக முதலில் இயற்றப்பட்ட வக்ஃப் மசோதா, 1995ல் 14 ஷரத்துகளில் 25 திருத்தங்களை இக்குழு செய்துள்ளது.
இதில் முன்மொழியப்பட்ட திருத்தங்கள் டிஜிட்டல் மயமாக்கல், மேம்படுத்தப்பட்ட தணிக்கைகள் மற்றும் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட சொத்துக்களை மீட்பதற்கான சட்ட சீர்திருத்தங்கள் மேம்படுத்தப்பட உள்ளன. இந்த திருத்தங்கள் குறித்து ஜேபிசி தலைவர் ஜகதாம்பிகா பால், முதன்முறையாக வக்ஃப் சலுகைகள் ஏழைகள், பெண்கள் மற்றும் அனாதைகள் உட்பட விளிம்புநிலை மக்களுக்கு சென்றடைவதை உறுதி செய்வதற்கான ஏற்பாடுகள் சேர்க்கப்பட்டுள்ளன என வலியுறுத்தினார்.மேலும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்ஸ்டிடியூட் ஆப் ரூரல் மேனேஜ்மென்ட் ஆனந்த் பல்கலைக்கழகத்தை திரிபுவன் சஹ்காரி பல்கலைக்கழகம் எனப் பெயரிடும் மசோதாவை அறிமுகப்படுத்துவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!