ரூ 8,27,00,000/- செலவில் புத்தம் புதுப் பொலிவுடன் திருமலை நாயக்கர் மஹால்!

 
ரூ 8,27,00,000/- செலவில் புத்தம் புதுப் பொலிவுடன் திருமலை நாயக்கர் மஹால்!


மதுரையில் உள்ள சுற்றுலாத் தளங்களில் உலக பிரசித்தி பெற்றது திருமலை நாயக்கர் மஹால். இது இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இதனை மறுசீரமைக்க நீண்ட நாட்களாக கோரிக்கை கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது அதற்கு தீர்வு காணும் வகையில் இந்து சமய அறநிலையத்துறை அரசு முதன்மைச் செயலாளர் ஆய்வு செய்தார். இதுகுறித்து அவர் விடுத்த செய்திக்குறிப்பில் திருமலை நாயக்கர் மகாலில் மறுசீரமைப்பு மற்றும் பாதுகாப்புப்பணிகள் ரூ.8,27,00,000/- செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

ரூ 8,27,00,000/- செலவில் புத்தம் புதுப் பொலிவுடன் திருமலை நாயக்கர் மஹால்!


ஜனவரியில் முடிவான இத்திட்டம் சட்டசபை பொதுத்தேர்தல் மற்றும் கொரேனா காரணமாக இதுவரை பணியை தொடங்க முடியவில்லை. பார்வையாளர்களுக்கு அரண்மனை எளிதில் தெரியக்கூடிய வகையில் முகப்பு விளக்குகள் ரூ.1.7 கோடி மதிப்பீட்டில் மிகப் பிரம்மாண்டமாக அமைக்கப்படும். இதற்கான பணிகள் தமிழ்நாடு போலீஸ் ஹவுசிங் கார்ப்பரேஷன் மூலம் தொடங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

From around the web