பொங்கல் முடிந்து ஊர் திரும்புறவங்க உஷார்... சிறப்பு ரயில்களின் நேரத்தில் திடீர் மாற்றம்!!

 
ரயில்

தமிழகத்தில் பொங்கல் தொடர் விடுமுறைக்காக உறவினர்களுடன் சேர்ந்து பொங்கல் கொண்டாட சொந்த ஊருக்கு சென்றிருப்பவர்கள் இதனை மறக்காம நோட் பண்ணிக்கோங்க. பொங்கல் பண்டிகைக்காக அறிவிக்கப்பட்டிருந்த தாம்பரத்தில் இருந்து நெல்லை வந்து செல்லும் சிறப்பு ரயில் புறப்படும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் பயணிகள் கவனத்திற்கு.. இன்று இந்த ரயில்கள் ரத்து!!..

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தாம்பரம்-நெல்லை இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது. இந்நிலையில் அந்த ரயில் தாம்பரத்தில் இருந்து புறப்படும் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தாம்பரத்தில் இருந்து வரும் 20, 27 ஆகிய தேதிகளில் (திங்கட்கிழமை) மதியம் 3.30 மணிக்கு புறப்பட்டு நெல்லை செல்லும் பொங்கல் சிறப்பு ரயில் (வண்டி எண்.06091), மறுநாள் அதிகாலை 4.55 மணிக்கு நெல்லை சென்றடையும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. 

ரயில்

தற்போது இந்த ரயில் தாம்பரத்தில் இருந்து புறப்படும் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில், தாம்பரத்தில் இருந்து மதியம் 2.30 மணிக்கு புறப்பட்டு நெல்லை செல்லும் சிறப்பு ரயில் செங்கல்பட்டுக்கு மதியம் 2.58 மணிக்கும், மேல்மருவத்தூருக்கு மாலை 3.23 மணிக்கும், விழுப்புரத்திற்கு 5.15 மணிக்கும், விருத்தாச்சலத்திற்கு 6.13 மணிக்கும், அரியலூருக்கு 7 மணிக்கும், ஸ்ரீரங்கத்திற்கு 7.53 மணிக்கும், திருச்சிக்கு 8.35 மணிக்கு என புதிய நேர அட்டவணைப்படி இயக்கப்படும். எஞ்சிய ரயில் நிலையங்களுக்கு பழைய நேர அட்டவணைப்படி ரயில் இயக்கப்படும்” என்று கூறப்பட்டுள்ளது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web