3 கோடி பெண்களை லட்சாதிபதியாக்க இலக்கு… திரௌபதி முர்மு!

 
மோடி திரௌபதி முர்மு


இந்தியாவில்  நாளை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் இன்று குடியரசுத் தலைவர் உரையுடன்  பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. இந்த கூட்டத்தொடரில் வக்பு வாரிய மசோதா, யுஜிசி உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு இருப்பதாக  கூறப்படுகிறது.

மோடி

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று இரு அவைகளின் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றினார்.  அந்த உரையில்  ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை நோக்கி அரசு வேகமாக பணிபுரிந்து  வருகிறது. அனைவருக்குமான வளர்ச்சி என்பது தான் மத்திய அரசின் தாரக மந்திரம்.

திரௌபதி முர்மு

உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் 10 கோடி பேருக்கு இலவச எரிவாயு சிலிண்டர் வழங்கப்பட்டுள்ளது. நாட்டில் சுமார் 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து விடுபட்டுள்ளனர். பெண்களின் தலைமையின் கீழ் நாட்டை அதிகாரம் செய்வதில் நம்பிக்கை கொண்டுள்ளது அரசு. நாட்டில் 3 கோடி பெண்களை லட்சாதிபதியாக்க இலக்கு நிர்ணயம்செய்யப்பட்டுள்ளது” என கூறியுள்ளார்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web