அடுத்த 3 மணி நேரத்தில் இந்த 14 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை

 
அடுத்த 3 மணி நேரத்தில் இந்த 14 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை

தமிழகத்தில் வளிமண்டல மேலெடுக்கு சுழற்சி காரணமாக கடலோர மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும், அதையொட்டியுள்ள மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்துள்ளதாகவும், அடுத்த சில நாட்களுக்கு கனமழை பெய்வது தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 3 மணி நேரத்தில் இந்த 14 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை

இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், சேலம், தருமபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், கடலூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 14 மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 3 மணி நேரத்தில் இந்த 14 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை

மேலும் குமரி பகுதி, தென் கடலோர தமிழ்நாடு மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 40-50 கிமீ வேகத்திலும் அவ்வப்போது மணிக்கு 60 கிமீ வேகத்தில் வீசக்கூடும். என்பதால் மேற்குறிப்பிட்ட காலப்பகுதியில் மீனவர்கள் இந்த கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.

From around the web