7-வது நாளாகச் சுடர் விட்டு எரியும் திருவண்ணாமலை மகா தீபம்... பக்தர்கள் பரவசம்!
உலகப் பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீபத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக ஏற்றப்பட்ட மகா தீபம், இன்று 7-வது நாளாக மலையின் உச்சியில் தொடர்ந்து சுடர் விட்டு எரிந்து வருகிறது.

அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த மாதம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் சிகர நிகழ்வான மகா தீபம் கடந்த டிசம்பர் 3-ஆம் தேதி, கோவிலின் பின்புறம் உள்ள 2,668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்பட்டது. இந்தத் தீபம் தொடர்ந்து 11 நாட்கள் பக்தர்களுக்குக் காட்சியளிக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, பலத்த காற்று மற்றும் மழைக்கு மத்தியிலும் மகா தீபம் இன்றும் 7-வது நாளாகச் சுடர் விட்டு எரிந்து வருகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் லட்சக்கணக்கான பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் இந்த மகா தீபத்தைத் தரிசித்து வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
