இன்று இந்த மாவட்டங்களில் கனமழை!! மக்களே உஷார்!!
Dec 6, 2021, 15:31 IST
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில வாரங்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. தற்போதும் ல் பல மாவட்டங்களில் மழை தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் மேலும் சில நாட்களுக்கு தென் தமிழகத்தில் மழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது.
இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 10 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் திருநெல்வேலி, தென்காசி ,தேனி, மதுரை, விருதுநகர் , திருச்சி மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் கரூர் , நாமக்கல் ,திருப்பூர் , திண்டுக்கல் மாவட்டங்களில் மிதமானது முதல் கனமானது வரை மழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
From around the
web