இன்று இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு அரைநாள் விடுமுறை!!
Nov 25, 2021, 15:11 IST
தமிழகத்தில் வங்கக் கடல் பகுதிகளில் மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறலாம். இதனால் இன்று தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று காலை முதல் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக இரு மாவட்டங்களிலும் இன்று மதியம் முதல் அரைநாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.
From around the
web