இன்று சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு நாள்!!
Nov 25, 2021, 09:02 IST
ஆண்டுதோறும் நவம்பர் 25ல் பெண்களுக்கு எதிரான அனைத்துலக வன்முறை ஒழிப்பு நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.1999 டிசம்பர் 17 ல் ஐக்கிய சபை இந்த நாளை தேர்ந்தெடுத்து பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு பன்னாட்டு நாளாகப் பிரகடனம் செய்தது.
1960 நவம்பர் 25ல் மிராபெல் சகோதரிகள் டொமினிக் குடியரசில் கொடுமையாக கொல்லப்பட்டதை நினைவு கூறும் வகையில் இன்றைய தினம் அனுசரிக்கப்படுகிறது. இவர்கள் “மறக்கமுடியாத வண்ணத்துப் பூச்சிகள்” என்று அழைக்கப்பட்டனர்.
உலகம் முழுவதும் பெண்கள் இன்று பல விதமான வன்முறைகளுக்கு ஆளாகி வருகின்றனர். பெண்களுக்கு வன்முறைகளை இழைத்து அதை நியாயப்படுத்தி வருகிறது அதிகார வர்க்கம். அதற்கு எதிரான நியாயமான தீர்க்கமான முடிவுகளை எடுப்பதற்காக பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு பன்னாட்டு நாள் கடைப்பிடிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
From around the
web