இன்று தேவர் ஜெயந்தி... டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

 
டாஸ்மாக்

இன்று தேவர் ஜெயந்தி விழாவினை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகளையும் மூட அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 

ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் இன்று அக்டோபர் 30ம் தேதி  பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை நடைபெறுகிறது. இந்த விழாவில் அரசியல் கட்சி தலைவர்கள், சமுதாய அமைப்பினர், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள்.  இன்று காலை 9.30 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்துகிறார்.

தேவர் ஸ்டாலின்

இதனையடுத்து போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி ராமநாதபுரத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளை மூடப்படும் என  மாவட்ட கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.  

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி

முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையையொட்டி அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்கவும், பொது அமைதி மற்றும் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையிலும் மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்படும் என மாவட்ட கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் அறிவித்துள்ளார். அதே நேரத்தில் கள்ளச்சந்தையில் மதுபானம் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதே சமயம் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் நாளை வரை 144 உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!