இன்று வசந்த பஞ்சமி... கேட்ட வரம் கிடைக்க இந்த பூஜையை மறக்காதீங்க!

இன்று பிப்ரவரி 2ம் தேதி வசந்த பஞ்சமி. நாம் கேட்கின்ற வரம் அனைத்தையும் அருளும் வசந்த பஞ்சமி வழிபாட்டை மறக்காதீங்க. இந்த நாள் வேண்டும் வரத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கான அத்தனை விசேஷமான நாள்.
ஒவ்வொரு மாதமும் அமாவாசை தினத்தை அடுத்து வரும் 5 வது நாள் பஞ்சமி திதி அனுசரிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பஞ்சமியுமே விசேஷமான நாள் என்றாலும் தை மாதத்தில் வருகின்ற பஞ்சமி பெரும் சிறப்பு வாய்ந்தது. இந்த பஞ்சமி நாளை வசந்த பஞ்சமியாக கொண்டாடுகிறோம்.
வசந்தபஞ்சமி திதியில் வாராஹியை வழிபட்டு வந்தால் எதிரிகளிடம் இருந்து நம்மை காத்து அருள்வாள் வாராஹி அன்றாட வாழ்க்கையில் எதிர்கொள்ளும் இன்னல்கள், இடர்ப்பாடுகள், எதிர்ப்புகள் அனைத்தையும் வெற்றி கொள்ள வைக்கும் வழிபாடு தான் வாராஹி வழிபாடு.
வசந்த பஞ்சமி பண்டிகை பல மாநிலங்களில் சரஸ்வதி பூஜையாக கொண்டாடப்படுகிறது. இன்றைய தினம் சரஸ்வதி வழிபாட்டுக்கு உகந்த தினமாக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த நாளில் உண்மையான பக்தியுடன் சரஸ்வதி தேவியை வழிபடுபவர்களுக்கு கல்வி கேள்விகளில் மேன்மை பெறுவர் என்பது காலம் காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் நம்பிக்கை
அபிராமி பட்டர் அபிராமி அந்தாதியில் கொண்டாடிய வாராஹி. இவளே நம் அனைத்து இன்னல்களில் இருந்தும் காப்பவளாக இருக்கிறாள். சப்த மாதர்களில் ஐந்தாவதாக இருக்கும் வாராஹியே சேனாதிபதி. இவள் விஷ்ணுவின் அம்சமாக திகழ்வதால் பாண்டவர்களை துன்பங்களிலிருந்து விடுவித்ததை போல நம்மை துன்பங்களிலிருந்து விடுபடச் செய்யவும் , எதிரிகளிடமிருந்து நம்மை காக்கவும் வாராஹி வழிபாடு சாலச் சிறந்தது.
இந்நாளில் அதிகாலை எழுந்து, குளித்து நீராடி, வீட்டிலிருக்கும் பூஜையறையில் குலதெய்வ வழிபாடு, விநாயகர் பூஜை செய்ய வேண்டும். விரல் மஞ்சள், குங்குமம் வைத்து வழிபடலாம். வேண்டுதல்களை நிறைவேற சங்கல்பம் செய்து , எளிய ஸ்லோகங்களில் ஆராதனை செய்யலாம். பச்சை கற்பூரம் கலந்த பால்,தோலுடன் கூடிய உளுந்து வடை , வெண்ணெய் சேர்த்த தயிர் சாதம், சர்க்கரை வள்ளிக்கிழங்கு, எள்ளுருண்டை இவற்றை நைவேத்தியமாக வைத்து வழிபடுவதூ சிறப்பான பலன்களை தரும்.
மாலை வேளைகளில் அருகில் இருக்கும் ஆலயங்களில் வாராஹி தரிசனம் செய்து , விரல் மஞ்சள் மாலை சமர்ப்பித்து, தேங்காயில் விளக்கேற்றி வழிபாட்டை நிறைவு செய்யலாம். இதன்படி தொடர்ந்து ஐந்து பஞ்சமிகளில் வாராஹியை வழிபாடு செய்து வர கேட்ட வரங்களை அள்ளித் தருவாள் வாராஹி . மேலும் இன்றைய தினத்தில் நம்மால் இயன்ற அளவு அன்னதானம் செய்வது , பானகம், நீர் மோர் வழங்குதல் இவற்றையும் செய்திட வாழ்வை குளிர்ச்சியாகவும், இனிமையாகவும் ஆக்குவாள் வாராஹி.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!