இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!!

 
இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!!

தமிழகத்தில் கடந்த 15 நாட்களாக தொடர்ந்து பெருமழை பெய்து வருகிறது. வங்கக்கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. அதே இடத்தில் நிலை கொண்டு உள்ளது.

இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!!


இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதனால் ராமநாதபுரம், நாகப்பட்டினம் மாவட்டங்களில் மிக கனமழையும், மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, டெல்டா மாவட்டங்களில் கனமழையும் பெய்யலாம் எனத் தெரிவித்துள்ளது.

இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!!


இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் மிகமிக கனமழை பெய்யலாம் என எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது. இதனால் அம்மாவட்ட கலெக்டர் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளித்துள்ளார். பொதுமக்கள் தேவையான பொருட்களை இருப்பு வைத்துக் கொள்ளவும் அறிவுறுத்தப் பட்டுள்ளது.

From around the web