இன்று 21 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!!

 
இன்று 21 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!!


தமிழகத்தில் வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக கடந்த 2 நாட்களாக பல மாவட்டங்களில் மீண்டும் அதிகனமழை பெய்ய தொடங்கி உள்ளது.
குறிப்பாக தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் மிக கனமழை பெய்து வருகிறது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் குளம் போல் தேங்கியுள்ளது.
சென்னையில் நேற்று முதல் கனமழை விட்டு விட்டு பெய்து வருகிறது. தொடர் கனமழை காரணமாக தூத்துக்குடி, திருவாரூர், புதுக்கோட்டை, நெல்லை, நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், காஞ்சீபுரம், திருவள்ளூர், தஞ்சை, திருச்சி, சென்னை, செங்கல்பட்டு, கடலூர், ராமநாதபுரம், விழுப்புரம், சேலம், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, வேலூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 21 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த கனமழை நவம்பர் 29 வரை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

From around the web