நாளை முதல் வீடு தேடி வருகிறது பொங்கல் தொகுப்புக்கான டோக்கன்... உங்க தெருவுல என்னைக்கு?

 
டோக்கன்
நாளை ஜனவரி 3ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் வீடு வீடாக பொங்கல் பரிசுத்தொகுப்பிற்கான டோக்கன்கள் விநியோகிக்கப்பட உள்ள நிலையில், உங்க தெருவில் என்னைக்கு டோக்கன் விநியோகிக்கப்பட உள்ளது என தெரிஞ்சுக்கோங்க. 

தமிழகத்தில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு ரேஷன் கடைகளில் பொங்கல் திருநாளையொட்டி தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்புடன் கூடிய பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படும் என தமிழக அரசு கடந்த சில நாட்களுக்கு முன் அறிவித்திருந்தது. 

பொங்கல்

பொங்கல் திருநாளை முன்னிட்டு வழங்கப்பட உள்ள இலவச வேட்டி சேலைகள் அனைத்தும் தயார் செய்யப்பட்டு, அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஜனவரி 10ம் தேதிக்குள் அனைவருக்கும் வேட்டி, சேலை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பரிசுத் தொகுப்புடன் இவற்றையும் சேர்த்து வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறுவதற்கான டோக்கன்கள் நாளை ஜனவரி 3ம் தேதி முதல் விநியோகம் செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

பொங்கல்

தொகுப்பு பெறும் நாள், நேரம் இவைகளை குறிப்பிட்டு வீடு வீடாக டோக்கன்கள் வழங்கப்படும் . இந்த  டோக்கன்களில் குறிப்பிட்ட நாளில் சென்று சம்பந்தப்பட்ட ரேஷன் அட்டைதாரர்கள் பொங்கல் தொகுப்பை ரேஷன் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம் எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஒரே நேரத்தில் ரேஷன் கடைகளில் குவிவதை தடுக்க டோக்கனில் தேதி, நேரம் குறிப்பிடப்பட்டுள்ளது

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web