கார் மோதி போக்குவரத்து காவலர் உயிரிழப்பு!

 
சென்னை
 

சென்னை பள்ளிகரணை அருகே நடந்த விபத்தில் போக்குவரத்து முதன்மை காவலர் மேகநாதன் உயிரிழந்தார். மடிப்பாக்கத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த அவர், அதிவேகமாக வந்த காரை நிறுத்த முயன்றார். ஆனால் அந்த கார் நிற்காமல் சென்றது.

ஆம்புலன்ஸ்

இதனைத் தொடர்ந்து மேகநாதன் தனது இருசக்கர வாகனத்தில் காரை துரத்தி சென்றார். அப்போது சாய்ராம் என்பவர் ஓட்டிய கார், காவலரின் பைக்கில் மோதியது. இதில் மேகநாதன் சாலையில் இழுத்துச் செல்லப்பட்டார். சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

போலீஸ்

உடனடியாக போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மதுபோதையில் கார் ஓட்டியதாக சாய்ராம் கைது செய்யப்பட்டார். விபத்து குறித்து சென்னை மாநகர காவல்துறை உயரதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!