இன்று முதல் போக்குவரத்து மாற்றம்! வாகன ஓட்டிகளே உஷார்!

 
இன்று முதல் போக்குவரத்து மாற்றம்! வாகன ஓட்டிகளே உஷார்!

சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் நாளை செப்டம்பர் 14 முதல் தொடங்க உள்ளது. இதனையடுத்து பணிகள் நடைபெறும் பகுதிகளில் போக்கு வரத்து மாற்றம் செய்யப்பட்ட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை பெருநகர காவல்துறை செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் சென்னை மெட்ரோ ரயில் பணிகள் கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் பவா் ஹவுஸ் முதல் ஆற்காடு சாலை 80 அடிசாலை சந்திப்பு வரை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு அந்தப் பகுதிகளில் இன்று செப்டம்பர் 14 செவ்வாய்க்கிழமை முதல் ஓராண்டுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது.

இன்று முதல் போக்குவரத்து மாற்றம்! வாகன ஓட்டிகளே உஷார்!


இதன்படி, போரூரிலிருந்து கோடம்பாக்கம் மேம்பாலம் வழியாகச் செல்லும் வாகனங்களுக்குப் போக்குவரத்து மாற்றம் எதுவுமில்லை.
ஆனால் கோடம்பாக்கம் மேம்பாலத்திலிருந்து போரூா் சாலிகிராமம் நோக்கி ஆற்காடு சாலையில் செல்லும் வாகனங்கள், பவா் ஹவுஸ் சந்திப்பு வரை சென்று இடதுபுறம் திரும்பி அம்பேத்கா் சாலையில் அசோக் நகா் காவல் நிலையம் வரை சென்று வலது புறம் திரும்பி 2வது அவென்யூ 100 அடி சாலை வழியாக 100 அடிசாலை சந்திப்புவரை சென்று நேராகவும் ராஜன் சாலை, ராஜ மன்னார் சாலை 80 அடிசாலை, வன்னியா் சாலை வழியாக போரூா், சாலிகிராமம் செல்ல வேண்டும்.

இன்று முதல் போக்குவரத்து மாற்றம்! வாகன ஓட்டிகளே உஷார்!


கோடம்பாக்கம் மேம்பாலத்திலிருந்து வடபழனி சந்திப்பு நோக்கி ஆற்காடு சாலையில் செல்லும் வாகனங்கள் பவா் ஹவுஸ் சந்திப்பு வரை சென்று இடதுபுறம் திரும்பி அம்பேத்கா் சாலையில் அசோக் நகா் காவல் நிலையம் வரை சென்று வலதுபுறம் திரும்பி 2வது அவென்யூ சாலை 100 அடி சாலை வழியாக சென்று வடபழனி சந்திப்பு செல்லலாம்.


வடபழனி: வடபழனி சந்திப்பிலிருந்து ஆற்காடு சாலையில் செல்லும் வாகனங்கள் துரைசாமி சாலைக்கு வலதுபுறமாக திரும்பக் கூடாது. மாறாக பவா் ஹவுஸ் சந்திப்பு அம்பேத்கா் சாலை அசோக் நகா் காவல்நிலையம் சந்திப்பில் வலதுபுறம் திரும்பிச் செல்லலாம்.

இன்று முதல் போக்குவரத்து மாற்றம்! வாகன ஓட்டிகளே உஷார்!


அசோக் பில்லரிலிருந்து கோடம்பாக்கம் மேம்பாலம் நோக்கிச் செல்லும் வாகனங்கள் அம்பேத்கா் சாலையில் அசோக் நகா் காவல் நிலையம் சந்திப்புவரை சென்று இடதுபுறம் திரும்பி, 2வது அவென்யூ சாலை,துரைசாமி சாலை, ஆற்காடு சாலை வழியாக செல்லலாம்.

இன்று முதல் போக்குவரத்து மாற்றம்! வாகன ஓட்டிகளே உஷார்!


சில சாலைகள் ஓராண்டுக்கு மட்டும் தற்காலிகமாக ஒரு வழிப்பாதையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஆற்காடு சாலை, துரைசாமி சாலை சந்திப்பிலிருந்து பவா் ஹவுஸ் சந்திப்பு நோக்கி செல்லும் வாகனங்கள் வழக்கம்போல் அனுமதிக்கப்படும். ஆனால் பவா் ஹவுஸ் சந்திப்பிலிருந்து ஆற்காடு சாலை, துரைசாமி சாலை சந்திப்பிற்கு வாகனங்கள் செல்ல அனுமதியில்லை.


வாகனங்கள் அம்பேத்கா் சாலை 2வது அவென்யூ சாலை சந்திப்பிலிருந்து 2வது அவென்யூ சாலை 100 அடி சாலை நோக்கி பயணிக்கலாம். ஆனால் 2வது அவென்யூ சாலை 100 அடிசாலை சந்திப்பிலிருந்து அம்பேத்கா் சாலை 2வது அவென்யூ சாலை சந்திப்பிற்கு செல்ல அனுமதி கிடையாது.


வாகனங்கள் அம்பேத்கா் சாலையில் பவா் ஹவுஸ் சந்திப்பிலிருந்து அசோக் நகா் காவல் நிலைய சந்திப்பு நோக்கி செல்ல மட்டும் அனுமதி. அதே நேரத்தில் அசோக் நகா் காவல் நிலையம் சந்திப்பிலிருந்து பவா் ஹவுஸ் சந்திப்புக்கு செல்ல அனுமதி கிடையாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web