நடுரோட்டில் தறிகெட்டு ஓடிய லாரி... சாலை தடுப்பில் மோதி விபத்து!

விருதுநகர் மாவட்டம் ஆர்.ஆர். நகரில் உள்ள தனியார் ஆலையில் இருந்து கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்திற்கு லாரி ஒன்று சிமெண்டு மூட்டைகளை ஏற்றிக் கொண்டு சென்றது. லாரியை மார்த்தாண்டத்தைச் சேர்ந்த விவின் என்பவர் ஓட்டி சென்றார்.
லாரி கோவில்பட்டி இனாம் மணியாச்சி அருகே சென்றபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தேசிய நெடுஞ்சாலை மையத்தில் உள்ள இரும்பு தடுப்பு வேலியில் மோதி, சுமார் 200 மீட்டர் தூரம் வரை தடுப்புகளை உடைத்து கொண்டு நின்றது. இதில் அதிர்ஷ்டவசமாக லாரி டிரைவர் காயமின்றி உயிர் தப்பினார். இந்த விபத்து குறித்து கோவில்பட்டி மேற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!