தவெக விஜய் அடுத்தடுத்து அதிரடி... பரந்தூரைத் தொடர்ந்து வேங்கைவயல்?!

 
வேங்கைவயல்

தவெக தலைவர் விஜய் கட்சி ஆரம்பித்த பிறகு முதன்முறையாக நேற்று முன்தினம் பரந்தூரில் மக்களை  நேரடியாக களத்தில் சந்தித்தார்.

அந்த பகுதியில் பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுமார் 900 நாட்களை கடந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த 13 கிராம மக்களிடையே உரையாற்றினார்.  திறந்தவெளி வாகனத்தில் பேசிய அவர், பரந்தூர் மக்களோடு துணை நிற்பதாகவும், இந்த இடத்தை தவிர்த்து வேறு இடத்தில் விமான நிலையம் அமைக்க வேண்டும் எனவும் கூறினார்.

வேங்கைவயல்

தனது நேரடி கள கனவு அரசியல் பயணத்தை பரந்தூரில் இருந்து ஆரம்பித்ததாக கூறிய விஜய், அடுத்ததாக பல்வேறு ஊர்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கேற்றாற் போல்  தவெக தலைவர் விஜய் அடுத்ததாக புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்திற்கு செல்ல இருப்பதாகவும்  அங்கு பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திக்கவும்  திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது.  இதுகுறித்து  அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

விஜய் மக்கள் இயக்கம்

கடந்த 2 வருடங்களுக்கு முன்னதாக வேங்கை வயல் கிராமத்தில் மக்கள் பயன்படுத்திய குடிநீர் தேக்க தொட்டியில் மனித கழிவு கலந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் பல்வேறு விசாரணை அமைப்புகள், பலகட்ட சோதனை நடத்தப்பட்டும்  இன்னும் குற்றவாளிகள் கண்டறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web