ஏர்போர்ட்டில் நடந்தது என்ன? மனம் திறந்தார் ஹிர்த்திக் பாண்டியா!!

 
ஏர்போர்ட்டில் நடந்தது என்ன? மனம் திறந்தார் ஹிர்த்திக் பாண்டியா!!


கிரிக்கெட் வீரர் ஹர்த்திக் பாண்டியா மும்பை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகளிடம் சிக்கினார். இது குறித்து சமூக வலைத்தளங்கள் மூலம் தவறான பல செய்திகள் பரவி வருகின்றன. அவரிடமிருந்து விலை உயரந்த 5 கோடி மதிப்புள்ள வாட்சுகள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளன. இந்த பொருட்களுக்கு ரசீது இல்லாத காரணத்தால் அதிகாரிகள் கைப்பற்றினர் எனத் தெரிவிக்கப் பட்டது.

ஏர்போர்ட்டில் நடந்தது என்ன? மனம் திறந்தார் ஹிர்த்திக் பாண்டியா!!


இந்நிலையில் ஹிருத்திக் பாண்டியா இந்த செய்தி குறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில் நவம்பர் 15ம் தேதி துபாயிலிருந்து மும்பை வந்துள்ளேன். விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் கவுண்டருக்கு சென்று வாங்கி வந்த பொருட்களை நானே கொடுத்தேன். இதற்கு வரி செலுத்த வேண்டும் என்று நானே தான் கூறினேன்.


ஆனால் இது குறித்து தவறான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. வாங்கி வந்த வாட்ச் களின் மதிப்பு 1.5 கோடி ரூபாய் .இந்திய சட்டத்தை மதிப்பவன் என்ற முறையில் வரி செலுத்தி பொருட்களை வாங்கியுள்ளேன். சட்டத்தை மீறியதாக வரும் செய்திகள் உண்மை இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

From around the web