மரணத்திற்குப் பிறகு என்ன நடக்கும்?.. கூகுளில் தேடிய 17வயது சிறுமி தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம்!

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள சத்ரபதி சிவாஜி நகரில் உள்ள தனது வீட்டில் 17 வயது சிறுமி தற்கொலை செய்து கொண்டார். நேற்று அதிகாலை தனது படுக்கையறையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். இது குறித்து அவரது பெற்றோர் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். சிறுமியின் மணிக்கட்டுகளில் சிறிய கூர்மையான கத்தியால் வெட்டப்பட்டிருந்தது. 5 வெட்டுக்கள் இருந்தன. அவரது கழுத்தும் வெட்டப்பட்டிருந்தது.
பெற்றோரை விசாரித்த போலீசார், பின்னர் சிறுமி பயன்படுத்திய செல்போனை ஆய்வு செய்தனர். அப்போது, மரணத்திற்குப் பிறகு என்ன நடக்கிறது என்பது குறித்த தகவல்களை கூகுளில் தேடியதாக தெரியவந்தது. ஐரோப்பிய கலாச்சாரங்களில் அவருக்கு மிகுந்த ஆர்வம் இருப்பதும் தெரியவந்தது. வெளிநாட்டு கலாச்சாரங்கள் குறித்து தனது டைரியில் அவர் விரிவாக எழுதியிருந்தார். ஒரு போலீஸ் அதிகாரி கூறியதாவது: விசாரணையில் சிறுமி ஐரோப்பிய கலாச்சாரத்தில் குறிப்பாக ஆர்வம் காட்டியதாக தெரியவந்தது.
அவர் சிறிது காலமாக மரணத்தை ஆராய்ச்சி செய்து வருவதாகவும் போலீசார் அறிந்தனர். சிறுமி ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாக இருந்ததாக தெரியவந்துள்ளது. எனவே, அவர் பல வாரங்களாக தற்கொலை செய்ய திட்டமிட்டிருக்கலாம். தற்கொலைக்கு சிறுமி பயன்படுத்தியதாகக் கூறப்படும் கத்தி உள்ளூர் சந்தையில் கிடைக்கவில்லை. கத்தியை ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கியிருக்கலாம். அதிகாரிகள் அவரது சமூக ஊடக கணக்குகளையும் சரிபார்த்து வருவதாக அவர் கூறினார். தற்கொலை செய்து கொண்ட சிறுமி அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். அவரது தந்தை நாக்பூரில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கியின் மூத்த அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!