சூரிய கிரகணம்: பரிகாரங்கள் என்ன? இதைச் செய்தால் தோஷங்களிலிருந்து விடுபடலாம்!!

 
சூரிய கிரகணம்: பரிகாரங்கள் என்ன? இதைச் செய்தால் தோஷங்களிலிருந்து விடுபடலாம்!!

இன்றைய சூரிய கிரகண பாதிப்புகளால் ஏற்படும் தோஷங்களில் இருந்து விடுபட என்ன செய்ய வேண்டும் என்பதைப் பார்க்கலாம். பொதுவாகவே அது சூரியன், சந்திரன் என எந்த கிரகண காலங்களாக இருந்தாலும், அவை சங்கடங்களை விளைவிப்பவை. இதனால் தீங்கு நேர்ந்து விடலாம். இந்த நேரத்தில் கடவுள் துதிகளைச் சொல்லி வணங்கலாம். இந்த கடவுள் என்று குறிப்பிட்டு சொல்லாமல், நம் குல தெய்வம், இஷ்ட தெய்வம் என எந்த கடவுளை நினைத்து ஒருமுகப்படுத்திய மனதோடு துதிகளை நம்பிக்கையோடு சொன்னாலும் நன்மை தான்.

சூரிய கிரகணம்: பரிகாரங்கள் என்ன? இதைச் செய்தால் தோஷங்களிலிருந்து விடுபடலாம்!!


ஓம் கணபதியே நமஹா
ஓம் சரவண பவ
ஓம் சிவாய நமஹ
யோசெள வஜ்ரதரோ தேவ ஆதித்யானாம் ப்ரபுர்மதா:|
ஸஹஸ்ர சந்த்ர நயன க்ரஹ பீடாம் வ்யபோஹத்||


இவை தவிர நமக்கு தெரிந்த மந்திரங்கள் அத்தனையும் தொடர்ந்து ஜெபித்து வர பல கோடி மடங்கு பலன் கிட்டும் . இதனால் நம்மை பிடித்திருக்கும், பிடிக்கப் போகும் தோஷங்கள் விலகும்.

சூரிய கிரகணம்: பரிகாரங்கள் என்ன? இதைச் செய்தால் தோஷங்களிலிருந்து விடுபடலாம்!!

கிரகண காலம் முடிந்த பின்னர் தலைக்கு குளிக்க வேண்டும். ஒரு பிடி கல் உப்பை தண்ணீரில் கரைத்து, அந்த தண்ணீரில் தலைக்கு குளித்து முடித்ததும், வீட்டில் விளக்கேற்றி வழிபாடு செய்து விட்டு, அருகில் இருக்கும் ஆலயங்களுக்கு மாலை சென்று வாருங்கள். கர்ப்பிணி பெண்கள் வீட்டை விட்டு கிரகண நேரத்தில் வெளியில் வரக்கூடாது. படியில் அமரக் கூடாது. கிரகண நேரத்தில் உணவு எடுத்துக் கொள்வதை தவிர்ப்பது உத்தமம்.

From around the web