சமயபுரம் கோயிலுக்குச் சென்று திரும்பியபோது துயரம்... பள்ளத்தில் கார் கவிழ்ந்து அரசுப் பள்ளி ஆசிரியர் பலி; 4 பேர் படுகாயம்!

 
விபத்து மரணம் கொலை  தற்கொலை விபத்து மரணம் கொலை  தற்கொலை

கோடை விடுமுறையைக் கழிப்பதற்காகக் குடும்பத்துடன் ஆன்மீகப் பயணம் சென்றுவிட்டுத் திரும்பிய அரசுப் பள்ளி ஆசிரியர்களின் கார், சென்னை வெளிவட்டச் சாலையில் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில், சம்பவ இடத்திலேயே ஆசிரியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், ஆசிரியை மற்றும் குழந்தைகள் உட்பட 4 பேர் பலத்த காயமடைந்த சம்பவம் ஆவடி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், ஆவடியை அடுத்த கோவில்பதாகை பகுதியைச் சேர்ந்தவர் சசிகலா. இவர் அரசுப் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். இவர் தனது மகன் லோகேஷ் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த தனது நண்பரான அரசுப் பள்ளி ஆசிரியர் பிரபாகரன் மற்றும் அவரது குடும்பத்தினருடன் இணைந்து, திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்குச் சாமி தரிசனம் செய்வதற்காகக் காரில் சென்றுள்ளனர்.

கொலை தற்கொலை வெட்டி மரணம் விபத்து

கோவிலில் தரிசனத்தை முடித்துவிட்டு, அவர்கள் அனைவரும் இன்று (மே 24, 2026) ஞாயிற்றுக்கிழமை காலை காரில் சென்னை நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தனர். கார் காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் அருகே வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்டச் சாலையில் வந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. அசுர வேகத்தில் சென்ற அந்த கார், சாலையோரம் இருந்த தடுப்புகளை உடைத்துக் கொண்டு அருகில் இருந்த ஆழமான பள்ளத்தில் பாய்ந்து தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த பயங்கர விபத்தின் இடிபாடுகளில் சிக்கி, காரை ஓட்டி வந்ததாகக் கூறப்படும் ஆசிரியர் பிரபாகரன் (35) பலத்த தலைக் காயமடைந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்துப் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், காரில் இருந்த ஆசிரியை சசிகலா, அவரது மகன் லோகேஷ் மற்றும் பிரபாகரனின் தம்பி மகள்களான சிறுமிகள் மதுழிளி, கழாளி ஆகிய 4 பேரும் ரத்தக் காயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தனர்.

பள்ளி மானவி தற்கொலை

இதனைப் பார்த்த அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள், உடனடியாகக் குன்றத்தூர் போலீசாருக்கும், அவசர ஆம்புலன்ஸ் சேவைக்கும் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், பொதுமக்களின் உதவியுடன் காயமடைந்த 4 பேரையும் மீட்டுச் சிகிச்சைக்காகக் குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்குத் தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்துக் குன்றத்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விபத்துக்கான காரணம் குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.