இரவு நேரத்தில் வீடு திரும்பிய போது சோகம்.. கூலித்தொழிலாளியை தாக்கி கொன்ற காட்டு யானை!
கேரள மாநிலத்தில் உள்ள வனப்பகுதிக்கு அருகில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் வன விலங்குகள் அவ்வப்போது தாக்குகின்றன. அவர்களில் சிலர் இறந்துவிட்டனர். இந்நிலையில், கொத்தமங்கலம் அருகே கோடியாட்டு பகுதியில் வசித்து வந்தவர் எல்தோஸ் (45). இவர் ஒரு தொழிலாளி. வேலையை முடித்துவிட்டு தன் நண்பனுடன் பேருந்தில் இருந்து இறங்கினார். அதன்பின், வீட்டிற்கு நடந்து சென்றார். சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் சென்றபோது, அவர்களை காட்டு யானை வழிமறித்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். ஆனால் எல்தோஸை துரத்தி சென்று யானை பிடித்து தாக்கியது. இதில் உடல் உறுப்புகள் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதையறிந்த அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றனர். அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்ப முயன்றனர். ஆனால் மக்கள் உடலை கொடுக்கவில்லை. இதுகுறித்து அவர்களிடம் கேட்டபோது, வன விலங்குகளின் தாக்குதல் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து வனத்துறையினரிடம் பலமுறை புகார் அளித்தும் பலனில்லை. அந்த பகுதிகளில் அகழிகள் மற்றும் வேலிகள் அமைக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக வரும் 27ம் தேதி மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த உறுதிமொழியை அடுத்து போராட்டக்காரர்கள் போராட்டத்தை கைவிட்டனர். அதன்பின், எல்தோஸின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே, உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு அரசு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கியுள்ளது.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!