ஈரோடு கிழக்கு தொகுதியில் அடுத்து போட்டியிடப்போவது யார்?... முதல்வர் சூசகம்!
தமிழகத்தில் ஈரோடு மாவட்டத்தில் கிழக்கு சட்டமன்ற தொகுதியில் 2021ல் நடைபெற்ற தேர்தலில் திருமகன் ஈவெரா போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் கடந்த வருடம் ஜனவரியில் உயிரிழந்ததை அடுத்து நடைபெற்ற இடைத்தேர்தலில் அவரது தந்தை ஈவிகேஎஸ்.இளங்கோவன் போட்டியிட்டு வெற்றிபெற்றார். ஆனால் அவரும் டிசம்பர் 14ம் தேதி திடீர் உடல்நலக்குறைபாடு காரணமாக உயிரிழந்தார்.
ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அங்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முறையும் அத்தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு கொடுக்கப்படுமா அல்லது திமுக கூட்டணிக்கு கொடுக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இது குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று கோவையில் ” ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி வெல்லும்.” என தெரிவித்துள்ளார். அப்போது அப்படி என்றால் இந்த முறையும் காங்கிரஸ் தான் போட்டியிடுமா என கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு ஈரோடு கிழக்கு தொகுதியில் இந்தியா கூட்டணி வெல்லும், இந்தியா கூட்டணியில் தான் திமுகவும் இருக்கிறது, காங்கிரஸ் கட்சியும் இருக்கிறது. ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடுமா அல்லது திமுக போட்டியிடுமா என்பதை ஆலோசித்து முடிவு செய்வோம்.” எனக் கூறியுள்ளார். தமிழகத்தில் ஈரோடு மாவட்டத்தில் கிழக்கு சட்டமன்ற தொகுதியில் 2021ல் நடைபெற்ற தேர்தலில் திருமகன் ஈவெரா போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் கடந்த வருடம் ஜனவரியில் உயிரிழந்ததை அடுத்து நடைபெற்ற இடைத்தேர்தலில் அவரது தந்தை ஈவிகேஎஸ்.இளங்கோவன் போட்டியிட்டு வெற்றிபெற்றார். ஆனால் அவரும் டிசம்பர் 14ம் தேதி திடீர் உடல்நலக்குறைபாடு காரணமாக உயிரிழந்தார்.
ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அங்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முறையும் அத்தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு கொடுக்கப்படுமா அல்லது திமுக கூட்டணிக்கு கொடுக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இது குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று கோவையில் ” ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி வெல்லும்.” என தெரிவித்துள்ளார். அப்போது அப்படி என்றால் இந்த முறையும் காங்கிரஸ் தான் போட்டியிடுமா என கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு ஈரோடு கிழக்கு தொகுதியில் இந்தியா கூட்டணி வெல்லும், இந்தியா கூட்டணியில் தான் திமுகவும் இருக்கிறது, காங்கிரஸ் கட்சியும் இருக்கிறது. ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடுமா அல்லது திமுக போட்டியிடுமா என்பதை ஆலோசித்து முடிவு செய்வோம்.” எனக் கூறியுள்ளார்.