பிச்சைக்காரனுடன் ஓடிய மனைவி.. செய்வதறியாது 6 குழந்தைகளுடன் தவிக்கும் கணவன்.. அதிர்ச்சி பின்னணி!
உத்தரபிரதேச மாநிலம் ஹர்தோய் மாவட்டத்தில் உள்ள ஹர்பால்பூர் பகுதியை சேர்ந்தவர் ராஜு (வயது 45). இவரது மனைவி ராஜேஸ்வரி (வயது 36). இவர்களுக்கு 6 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 3ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற ராஜேஸ்வரி அதன் பிறகு வீடு திரும்பவில்லை. பிச்சைக்காரர் ஒருவர் தனது மனைவியைக் கடத்திச் சென்றதாக பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் கீழ் அவரது கணவர் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது:- நான்சே பண்டிட் (வயது 45) என்ற பிச்சைக்காரர் எங்களது பகுதி வீடுகளுக்கு பிச்சை எடுக்க வருவார்.
அப்போது என் மனைவி ராஜேஸ்வரியும், அவரும் நண்பர்களானார்கள். இருவரும் அடிக்கடி பேசுவதும், வழக்கம். கடந்த 3ம் தேதி மதியம் 2 மணியளவில் எனது மனைவி ராஜேஸ்வரி மார்க்கெட்டுக்கு சென்று மகளிடம் துணி, காய்கறிகள் வாங்க போவதாக கூறினார். அதன்பிறகு அவள் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் அவளைக் காணவில்லை. என் மனைவி எருமை மாட்டை விற்ற பணத்துடன் வீட்டை விட்டு வெளியேறினாள்.
நன்ஹே பண்டிட் அவளை அழைத்துச் சென்றிருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் புகார் மனுவில் கூறியுள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பெண்ணை கண்டுபிடித்து மீட்டனர். அவள் வாக்குமூலத்தை பதிவு செய்தனர். அவரை கடத்தியதாக கூறப்படும் நான்ஹே பண்டிட்டை தேடி வருகின்றனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!