சிறைக்கு கணவனைப் பார்க்க கஞ்சாவுடன் வந்த இளம்பெண் கைது!

 
கஞ்சா

திருநெல்வேலி பாளையங்கோட்டை மத்திய சிறையில் கணவரை பார்க்க வந்த இளம்பெண், கஞ்சா மறைத்து வந்ததால் போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சிதம்பரநகர் பகுதியைச் சேர்ந்த சரோஜினி சாரல் (24), தனது கணவர் வேல்சங்கர் தமிழக போலீசார் கைது செய்ததைத் தொடர்ந்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கணவரை சந்திப்பதற்காக சரோஜினி நேற்று சிறைக்கு வந்தார்.

கஞ்சா கடத்தல்

அவர் எடுத்துவந்த பைகளை சிறை பாதுகாப்புப் பிரிவு போலீசார் வழக்கம்போல் சோதனை செய்த போது, ஒரு சிறிய பொட்டலத்தில் கஞ்சா மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், அந்த கஞ்சாவை சிறையில் உள்ள தனது கணவருக்கு வழங்க வந்ததாக சரோஜினி ஒப்புக்கொண்டதாக தகவல்.

கஞ்சா

இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். சிறை வளாகத்துக்குள் போதைப்பொருள் அனுமதிக்க முயன்ற சம்பவம் என்பதால், மேலும் எவரெல்லாம் இதில் தொடர்புடையவர்கள் என்பதையும் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்தச் சம்பவம் சிறையிலும், பொதுமக்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?