இல்லத்தரசிகளுக்கு குட்நியூஸ்... தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் மீண்டும் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்ப படிவம்!

தமிழகம் முழுவதும் இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ1000 உதவித்தொகை வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்து செயல்பட்டு வருகிறது.
இந்தத் திட்டத்தில் விண்ணப்பிக்க 2024 ஜூலையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு விண்ணப் படிவங்கள் வழங்கப்பட்டன. இதில் 1.63 கோடி பேர் பதிவு செய்து அரசு விதிகளின்படி, 1.15 கோடி பயனர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு மாதம்தோறும் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது.
இந்தத் திட்டத்தில் விடுபட்டவர்களுக்கான விண்ணப்ப படிவம் மீண்டும் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு மக்கள் கோரிக்கை வைத்தனர்.
அதனை ஏற்ற தமிழக அரசு, தற்போது ரேஷன் கடைகள் மூலம் விண்ணப்ப படிவங்களை வழங்கி வருகிறது. இதனால் தனி குடும்ப அட்டை வாங்குவதற்கு மக்கள் போட்டி போட்டு விண்ணப்பித்து வருவதாக உணவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!