காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்!

 
காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்!


மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதி விளாச்சேரி மொட்டமலை. இங்குள்ள கலைஞர் நகர் பகுதியில் கடந்த 2 மாதமாக குடிநீர் சப்ளை செய்யப்படவில்லை. இதனையடுத்து அப்பகுதி கிராம மக்கள் வெளியில் லாரிகளில் விற்கப்படும் தண்ணீரை காசுக்கு வாங்கி வந்தனர்.

இந்நிலையில் திடீரென்று காலிகுடங்களுடன் பெண்கள் திரண்டு சாலையில் குடிதண்ணீர் கேட்டு போராட்டம் நடத்தினர். இதனால் சிறிது நேரம் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.
இந்நிலையில் உடனடியாக காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என உறுதி அளித்ததை அடுத்து போராட்டத்தை கைவிட்டனர்.

காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்!


இது குறித்து அப்பகுதி பெண்கள் தெரிவிக்கையில் கிராமத்தில் நீரேற்று மின்மோட்டார் கடந்த 2 மாதத்திற்கு முன்பு பழுதாகிவிட்டது. அதை சரி செய்யாமலேயே ஊராட்சி நிர்வாகம் கிடப்பில் போட்டுள்ளது. இதனால் 50 நாட்களாக ஒரு குடம் தண்ணீர் ரூ.10க்கு விலை கொடுத்து வாங்கி பயன்படுத்த வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். உடனடியாக இதற்கு தீர்வு காண வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

From around the web