உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி: இந்தியாவை வீழ்த்தி சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது நியூசிலாந்து

 
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி: இந்தியாவை வீழ்த்தி சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது நியூசிலாந்து

இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐ.சி.சி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தில் உள்ள சவுத்தம்டனில் நடைபெற்று. முதல் இன்னிங்சில் இந்தியா 217 ரன்கள், நியூசிலாந்து 249 ரன்களும் எடுத்து இருந்தன.

32 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா அணி 2 விக்கெட் இழப்புக்கு 64 ரன்கள் எடுத்த நிலையில், 5வது நாள் ஆட்டம் நிறைவடைந்தது. புஜாரா 12 ரன்னுடனும், கோலி 8 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 6வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய இந்தியா அணி கேப்டன் கோலி 13 ரன்களில் ஆட்டம் இழந்து பெவிலியன் திரும்பினார். புஜாரா 15 ரன்கள், ரகானே 15 ரன்கள், ஜடேஜா 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். மிகவும் பொறுமையாக ஆடிய ரிஷப் பண்ட், 41 ரன்கள் சேர்த்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, இந்தியா அணியை 170 ரன்களில் சுருட்டியது நியூசிலாந்து.

53 ஓவர்களில் 139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற வெற்றி இலக்குடன் விளையாட தொடங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரையும் அஸ்வின் வெளியேற்றினார். கேப்டன் கேன் வில்லியம்சனும், ராஸ் டெய்லரும் பொறுமையாக ஆடி நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.

அட்டா நாயனாக நியூசிலாந்து அணியின் கைல் ஜேமீசன் தேர்வு செய்யப்பட்டார்.

From around the web