தோழி இறந்தது தெரியாத யாஷிகா! சீட் பெல்ட் அணியாத சோகம்!

 
தோழி இறந்தது தெரியாத யாஷிகா! சீட் பெல்ட் அணியாத சோகம்!

கார் விபத்தில் யாஷிகாவின் தோழி பவானி இறந்ததை யாஷிகாவிடம் இதுவரை கூறவில்லை என்று யாஷிகாவின் அம்மா சோனல் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

தோழி இறந்தது தெரியாத யாஷிகா! சீட் பெல்ட் அணியாத சோகம்!

நடிகை யாஷிகா ஆனந்த், தன் தோழி பவானி, நண்பர்கள் செய்யது, அமீருடன் பாண்டிச்சேரிக்கு சென்று விட்டு சென்னைக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். காரை யாஷிகா ஓட்டி வந்த நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் கிழக்கு கடற்கரை சாலையில் தடுப்புச்சுவரில் மோதி கார் பயங்கர விபத்துக்குள்ளானது.

தோழி இறந்தது தெரியாத யாஷிகா! சீட் பெல்ட் அணியாத சோகம்!

இதில், சம்பவ இடத்திலேயே பவானி பலியானார்; படுகாயம் அடைந்த யாஷிகா, செய்யது, அமீர் ஆகியோர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காரில் 6 ஏர்பேக்குகள் இருந்தும் சீட் பெல்ட் அணியாததால், யாஷிகாவின் தோழி இந்த விபத்தில், காரில் இருந்து தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். விபத்து ஏற்பட்டபோது யாஷிகா தனது காரை 120 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கி வந்துள்ளார் என்றும் கூறப்படுகிறது

தோழி இறந்தது தெரியாத யாஷிகா! சீட் பெல்ட் அணியாத சோகம்!

“என் மகளுக்கு இப்போது பரவாயில்லை. வலது கால் மற்றும் இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டதால் அறுவைச் சிகிச்சை செய்துள்ளார்கள். வயிற்றின் முன்பகுதியிலும் பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. பவானி இறந்தது யாஷிகாவுக்கு இதுவரையில் தெரியாது. யாஷிகாவின் பிபி அதிகமாக இருப்பதால், அதிர்ச்சியளிக்கும் விஷயம் எதையும் யாஷிகாவிடம் சொல்ல வேண்டாம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

தோழி இறந்தது தெரியாத யாஷிகா! சீட் பெல்ட் அணியாத சோகம்!


பவானி எப்படி இருக்கிறார் என்று அடிக்கடி கேட்டார் யாஷிகா. க்ரிட்டிகலாக இருக்கிறார், வென்டிலேட்டரில் இருக்கிறார். அவரின் அப்பா, அம்மா வந்திருக்கிறார்கள் என்று யாஷிகாவிடம் சொல்லியிருக்கிறேன். யாஷிகா இரண்டு மாதங்கள் கழித்து தான் மெல்ல மெல்ல நடக்க முடியும் என்கிறார்கள் என்று யாஷிகாவின் தாய் சோனல் கூறியுள்ளார்

From around the web