கேரளாவில் இன்று மேலும் 3 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு

 
கேரளாவில் இன்று மேலும் 3 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு

கொரோனாவுக்கு மத்தியில் டெங்கு காய்ச்சலும், ஜிகா வைரஸூம் கேரளாவை மிரள வைத்து கொண்டிருக்கிறது.

கேரளாவின் திருவனந்தபுரம் அருகே உள்ள பாறசாலை பகுதியை சேர்ந்த கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கு ஜிகா வைரஸ் உறுதி செய்யப்பட்ட நிலையில், அவருடன் தொடர்பிலிருந்தவர்கள் உள்பட இன்னும் சிலருக்கும் ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து திருவனந்தபுரத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கேரள அரசு தீவிரமாக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில், கேரளாவில் இன்று மேலும் 3 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட 3 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதன் மூலம் கேரளாவில் ஜிகா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது. ஜிகா வைரஸ் பாதிப்பால் தற்போது 5 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

From around the web