ஆம் ஆத்மி கட்சி: தேசிய ஒருங்கிணைப்பாளராக கெஜ்ரிவால் 3-வது முறையாக தேர்வு

 
ஆம் ஆத்மி கட்சி: தேசிய ஒருங்கிணைப்பாளராக கெஜ்ரிவால் 3-வது முறையாக தேர்வு

டெல்லியில் நடைபெற்ற ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில் அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராக 3வது முறையாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் அக்கட்சியில், ஒருவர் 2 முறைக்கும் கூடுதலாக ஒரு பதவியை வகிப்பதற்கான சட்டதிருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

இதேபோன்று, 2 முறை தேசிய செயலாளராக பதவி வகித்த பங்கஜ் குப்தா மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். கட்சியின் மூத்த தலைவர்களான என்.டி.குப்தா பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்

மேலும் கெஜ்ரிவால் உள்பட 34 பேர் அடங்கிய புதிய செயற்குழுவும் தேர்வு செய்யப்பட்டது.

From around the web