திமுகவை அடுத்து அதிமுக நிர்வாகிகள் வீடுகளிலும் ரெய்டு!

 
திமுகவை அடுத்து அதிமுக நிர்வாகிகள் வீடுகளிலும் ரெய்டு!


தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதை அடுத்து தேர்தலை நேர்மையான முறையில் நடத்த வருமானவரித்துறையுடன் இணைந்து தேர்தல் ஆணையம் பல அதிரடி சோதனைகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் நேற்று திமுக தலைவர் ஸ்டாலின் மகள் செந்தாமரை மற்றும் மருமகன் வீடுகளில் சோதனைகள் நடத்தப்பட்டன.

திமுகவை அடுத்து அதிமுக நிர்வாகிகள் வீடுகளிலும் ரெய்டு!

தற்போது அந்த வரிசையில் மயிலாடுதுறை மாவட்டம் பொறையாரை சேர்ந்த அதிமுக நிர்வாகி கிருஷ்ணசாமி வீட்டில் சோதனை செய்யப்பட்டது. இதில் சில ஆவணங்கள் மற்றும் பார்சல்களை கைப்பற்றினர்

திமுகவை அடுத்து அதிமுக நிர்வாகிகள் வீடுகளிலும் ரெய்டு!


இதை போலவே அ.தி.மு.க. நிர்வாகி அருணாசலம் மற்றும் கிடங்கல் கிராமத்தை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகரும் செம்பனார்கோவில் முன்னாள் ஒன்றியக் குழு தலைவருமான ஜனார்த்தனம் ஆகியவர்களின் வீடுகளிலும் வருமான வரித்துறையினர் திடீரென சோதனை நடத்தினர். இதிலும் சில ஆவணங்கள், பார்சல்கள் பறிமுதல் செய்யப்பட்டன..
அ.தி.மு.க. நிர்வாகிகள் வீடுகளில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தியது குறித்து கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பு உருவாகி வருகிறது.

dinamaalai.com

From around the web